search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    14.12 வினாடிகளில் தலைப்பாகை கட்டி கின்னஸ் சாதனை படைத்த நபர்
    X

    14.12 வினாடிகளில் தலைப்பாகை கட்டி கின்னஸ் சாதனை படைத்த நபர்

    • மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா பச்சோலி என்பவர் 14.12 வினாடிகளில் தலைப்பாகையை ஒருவர் மீது விரைவாக கட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
    • நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு ஆரஞ்சு நிற வடிவிலான தலைப்பாகையை ஆதித்யா பச்சோலி நேர்த்தியாக கட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது.

    தலைப்பாகை அணிவது வட இந்தியாவில் பாரம்பரிய பழக்கத்தில் ஒன்று. குறிப்பாக திருமண விழாக்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளின் போது தலைப்பாகை கட்டுவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா பச்சோலி என்பவர் 14.12 வினாடிகளில் தலைப்பாகையை ஒருவர் மீது விரைவாக கட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு ஆரஞ்சு நிற வடிவிலான தலைப்பாகையை ஆதித்யா பச்சோலி நேர்த்தியாக கட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது.

    இந்த வீடியோ ஆயிரகணக்கான பார்வைகளை பெற்ற நிலையில் பல்வேறு விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் தனது பதிவில், கின்னஸ் உலக சாதனை அதன் மதிப்பை இழந்து விட்டது. சமீபகாலமாக அவர்கள் எதையும் அங்கீகரிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் இந்த சாதனையை என்னால் முறியடிக்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

    Next Story
    ×