என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா- பாகிஸ்தான் போட்டி போர் போன்று சித்தரிக்கப்படுகிறது: உமர் அப்துல்லா
    X

    இந்தியா- பாகிஸ்தான் போட்டி போர் போன்று சித்தரிக்கப்படுகிறது: உமர் அப்துல்லா

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் மறுப்பு.
    • ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்த்து விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் இந்த போட்டியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

    விளையாட்டுக்கும் அரசியலுக்கும் இடையேயான வேறுபாட்டை நாம் இப்போது முற்றிலும் நிறுத்திவிட்டோம். மீண்டும் மீண்டும், ஊடகங்கள் மூலம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போட்டி நடக்கும்போதெல்லாம் அது ஒரு போராகவே சித்தரிக்கப்படுகிறது. அதை ஒரு சாதாரண போட்டி போல ஒருபோதும் ஒளிபரப்புவதில்லை.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

    முன்னதாக,

    வங்கதேசத்தில இந்து நபர்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழும்பியது. மேலும், வங்கதேசத்தில் இந்து மக்கள் தாக்கப்படும்போது, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் விளையாடுவதா? எனவும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா அணி அவரை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால், கொல்கத்தா அணியிடம் முஸ்தாபிஜுர் ரகுமானை விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

    அதனடிப்படையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் அதிருப்தியடைந்தது. வருகிற 7-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் எனவும், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தது. ஆனால், ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.

    வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்தது. அதனடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக லீக் தொடர் போட்டியை புறக்கணிக்கிறோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுத்துள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×