search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களவை தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
    X

    மக்களவை தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிர்மலா சீதாராமன்

    • ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.
    • போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது:-

    பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நன்றாக சந்தித்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று ஒருவேளை இல்லை என பதில் அளித்தேன். போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.

    நீங்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களா? இந்த மதத்தில் இருந்து வந்தவரா? இங்கிருந்து வந்தீர்களா? போன்ற வெற்றிக்கான அளவுகோல்களின் கேள்வியாக இருக்கும். இதையெல்லாம் செய்ய நம்மால் முடியும் என்று நான் நினைக்கவில்லை.

    என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டதற்காக நான் நன்றியுள்ளவராக உள்ளேன். ஆகவே, நான் போட்டியிடவில்லை." என்றார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    Next Story
    ×