search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இது ஜேம்ஸ் பாண்டு படம் அல்ல: கெஜ்ரிவால் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பதில்
    X

    இது ஜேம்ஸ் பாண்டு படம் அல்ல: கெஜ்ரிவால் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பதில்

    • அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

    டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அவர் திகார் சிறையில் உள்ளார்.

    பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த விசயத்தில் நாங்கள் தலையிட முடியாது. இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்ததோடு அந்த மனுவை தள்ளுபடி செய்து.

    ஆனால் மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்தது. இதற்கிடையே தொடர்ந்து கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் கோபம் அடைந்த டெல்லி உயர்நீதிமன்றம், "இந்த விசயத்தில் நாங்கள் ஒருமுறை உத்தரவு பிறப்பித்துவிட்டோம். அதன்பிறகு தொடர்ந்து வழக்கு தொடரக்கூடாது. அடுத்தடுத்த தொடர்ச்சிகள் இருப்பதற்கு இது ஒன்றும் ஜேம்ஸ் பாண்டு படம் அல்ல" என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வழக்கு, ஜாமின் மனு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×