என் மலர்tooltip icon

    இந்தியா

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மத்திய அரசு இன்று ஆலோசனை
    X

    மந்திரி மன்சுக் மாண்டவியா

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மத்திய அரசு இன்று ஆலோசனை

    • உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது.
    • ஜப்பான், அமெரிக்கா, சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளது.

    கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.

    இந்நிலையில், கொரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

    Next Story
    ×