என் மலர்tooltip icon

    இந்தியா

    Love Failure பற்றி பேசுவதா? சகோதரியை 50 முறை கத்தியால் குத்தி கொன்ற என்ஜினீயர் - உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்
    X

    கொலை செய்யப்பட்ட ஹிம்ஷிகா, கைதான ஹார்திக்கை படத்தில் காணலாம். அவரது தாய் உடன் உள்ளார்.

    Love Failure பற்றி பேசுவதா? சகோதரியை 50 முறை கத்தியால் குத்தி கொன்ற என்ஜினீயர் - உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்

    • ஹார்திக் பழகி வந்த பெண் தொடர்பாக பேச்சு எழுந்தது. இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த ஹார்திக் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஹிம்ஷிகாவை பயங்கரமாக உடலில் பல இடங்களில் குத்தினார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மொராதாபாத் படாயூனை சேர்ந்தவர் ஹிம்ஷிகா (வயது25), இவரது சகோதரர் ஹார்திக். இரட்டையர்களான இவர்கள் டெல்லி குருகிராமில் தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களது தந்தை பிரிந்து சென்று விட்டார். தாய் காப்பீட்டு நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    ஹிம்ஷிகா எம்.பி.ஏ. படித்து கொண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஹார்திக் என்ஜினீயரிங் முடித்துள்ளார். ஹார்திக் கடந்த ஒரு ஆண்டாக பணிக்கு செல்லவில்லை. ஹார்திக் வேறு மத பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்தார். அந்த பெண்ணை அவர் நேரில் சந்திக்கவில்லை. இருவரும் சமூக ஊடகங்கள் வாயிலாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவருக்குமான தொடர்பு முறிந்து போனது. இதனால் ஹார்திக் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ஹிம்ஷிகா, ஹார்திக் 2 பேரும் கோலி பண்டிகை கொண்டாடுவதற்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்தனர். அங்கு 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஹார்திக் பழகி வந்த பெண் தொடர்பாக பேச்சு எழுந்தது. இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த ஹார்திக் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஹிம்ஷிகாவை பயங்கரமாக உடலில் பல இடங்களில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் வீட்டிலேயே கிடந்தது.

    அதைத்தொடர்ந்து எதுவும் நடக்காததுபோல் இருந்த ஹார்திக் தனது தாயின் அலுவலகத்திற்கு சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு அறையில் ஹிம்ஷிகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை தாயிடம் அவர் காண்பித்தார். இதனை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டார்.

    அப்போது திடீரென ஹார்திக் தாயையும் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி ஹார்திக்கை கைது செய்தனர்.

    ஹிம்ஷிகாவின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹிம்ஷிகாவை ஹார்திக் 50 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றது தெரியவந்தது.

    அவரது கழுத்து, மார்பு, வயிறு, கைகள், கால்கள், தோள்பட்டைகள், முகம் என அவரது உடல் முழுவதும் 50 இடங்களில் ஆழமான கத்தி குத்து காயம் இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர். அவரது இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்பட பல முக்கிய உறுப்புகள் கடுமையாக சேதமடைந்து அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

    Next Story
    ×