search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் to அயோத்தி: முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்
    X

    அகமதாபாத் to அயோத்தி: முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்

    • பயணிகள் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலையத்திற்கு வந்தனர்.
    • அயோத்தி செல்லும் முதல் விமானம் என்பதால் ஊழியர்களுடன் பயணிகள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

    அகமதாபாத்:

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்தக் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர். திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அயோத்திக்கான முதல் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டது. இந்த விமானத்தில் சென்ற பயணிகள் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலையத்திற்கு வந்தனர்.

    அயோத்திக்கு செல்லும் முதல் விமானம் என்பதால் ஊழியர்களுடன் பயணிகள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×