search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது
    X

    6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது

    • ஏப்ரல் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.
    • மே மாதம் 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதி களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி ஏப்ரல் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.

    தற்போது 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. மே 7-ந்தேதி 94 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 4-ம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 4-ம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு மே 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான மனு தாக்கல் இன்று (திங்கட் கிழமை) நிறைவு பெறுகிறது. இதற்கிடையே மே 20-ந் தேதி 49 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் நடை பெற உள்ளது.

    இதற்கான மனுதாக்கல் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. வருகிற 6-ந்தேதி இந்த 49 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து 6-ம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. 6-ம் கட்ட தேர்தல் மொத்தம் 57 தொகுதிகளுக்கு நடத்தப்பட உள்ளது. 6-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் இன்று (29-ந் தேதி) தொடங்கியது. மனு தாக்கல் செய்ய 6-ந்தேதி கடைசி நாளாகும்.

    7-ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 9-ந்தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். மே மாதம் 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்படும். 6-ம் கட்ட தேர்தலில் அரியானாவில் 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. அதுபோல டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்று தேர்தல் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளில் 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் லக்னோ தொகுதியில் போட்டியிட இன்று மனுதாக்கல் செய்தார்.

    Next Story
    ×