என் மலர்tooltip icon

    இந்தியா

    உ.பி. மருத்துவமனையில் எலிகள் கள ஆய்வு... ஆக்சிஜன் குழாய்கள் மேல்ஏறி கொண்டாட்டம் - காங்கிரஸ் விமர்சனம்!
    X

    உ.பி. மருத்துவமனையில் எலிகள் கள ஆய்வு... ஆக்சிஜன் குழாய்கள் மேல்ஏறி கொண்டாட்டம் - காங்கிரஸ் விமர்சனம்!

    • நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் சிதறும் உணவுத் துண்டுகள் காரணமாகவே எலிகள் அதிகளவில் வருகின்றன
    • உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளில் எலிகள் உலா வருவது இது முதல்முறையல்ல.

    உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மருத்துவக் கல்லூரியில் ஒரு வார்டில் எலிகள் சுற்றித்திரியும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    அந்தப் பதிவில்,

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா மருத்துவக் கல்லூரியின் இந்தக் காட்சியைக் கவனியுங்கள். இங்கே, மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில், எலிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குண்டாகவும், மெலிந்தும், உருண்டையாகவும்... என அனைத்து வகையான எலிகளும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த மருத்துவக் கல்லூரி வார்டு மனிதர்களுக்கானது அல்ல, எலிகளுக்கானது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது." எனக் குறிப்பிட்டுள்ளது.

    கோண்டா மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் வார்டில், நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும், ஆக்சிஜன் குழாய்கள் மீதும் எலிகள் ஓடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா நிரஞ்சன் மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். உடனடியாக வார்டில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் சிதறும் உணவுத் துண்டுகள் காரணமாகவே எலிகள் அதிகளவில் வருவதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளில் எலிகள் உலா வருவது இது முதல்முறையல்ல. பலமுறை இதுபோன்ற புகார்வது எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் ஜபல்பூர் மருத்துவமனைகளிலும் சமீப காலங்களில் எலித் தொல்லை மற்றும் நோயாளிகளை எலிகள் கடித்த புகார்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×