search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூரில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
    X

    மணிப்பூரில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

    • மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது.

    இம்பால்:

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் இந்திய மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. மாநில தலைநகர் இம்பாலில் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.

    இந்நிலையில், ஷிருய் பகுதியில் இன்று இரவு 7.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகாக பதிவாகியிருந்தது.

    கடல் மட்டத்திலிருந்து 31 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

    Next Story
    ×