என் மலர்
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
- ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே, நேபாளத்தில் நேற்று காலை 7.24 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலும், நேற்று மாலை 5.18 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்கு தப்பியோடினர். இதில், சில வீடுகள் முழுவதுமாக அல்லது பகுதியாக இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகின.
Next Story






