என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் 5 கி.மீ. வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
    X

    திருப்பதியில் 5 கி.மீ. வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

    • திருப்பதியில் 66,530 பேர் தரிசனம் செய்தனர்.
    • தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் நேற்று மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

    இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது.

    பக்தர்கள் ஷீலா தோரணம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 66,530 பேர் தரிசனம் செய்தனர். 32,478 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசுகிறது

    இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    Next Story
    ×