search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியை உலுக்கிய சம்பவம்.. காதலியை குத்திக் கொன்ற காதலன் உ.பி.யில் கைது
    X

    டெல்லியை உலுக்கிய சம்பவம்.. காதலியை குத்திக் கொன்ற காதலன் உ.பி.யில் கைது

    • ஆயுதம் வைத்திருந்ததால் அந்த வாலியரை நெருங்குவதற்கு பயந்து பொதுமக்கள் ஒதுங்கி சென்றனர்.
    • குற்றவாளிகளுக்கு பயம் இல்லை, போலீசாரைப் பார்த்து பயப்படுவதில்லை என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி ஷாபாத் டைரி பகுதியில் நேற்று இரவு சாக்ஷி என்ற 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தனது காதலனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    தோழியின் மகன் பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த அவரது காதலன் ஷகில், சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். 20க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தியதுடன் விடாமல், அருகில் கிடந்த கல்லையும் எடுத்து தலையில் போட்டுள்ளான். இதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனாள்.

    இந்த கொடூர கொலையை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். ஆனால் யாரும் அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை. ஆயுதம் வைத்திருந்ததால் அந்த வாலியரை நெருங்குவதற்கு பயந்து ஒதுங்கி சென்றனர்.

    இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு குற்றவாளியை உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் அருகே கைது செய்தனர்.

    பொதுமக்கள் கண்முன்னே நடந்த இந்த படுகொலை மிகவும் வேதனை அளிப்பதாகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    "குற்றவாளிகளுக்கு பயம் இல்லை, போலீசாரைப் பார்த்து பயப்படுவதில்லை. கவர்னர் அவர்களே, சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பில்தான் உள்ளது, எதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம்" என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×