என் மலர்
இந்தியா

டெல்லி கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
- காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இதையடுத்து அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
கார் வெடித்துச் சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் இன்று மதியம் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் டெல்லி கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Next Story






