என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்குவங்க சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் தனித்து போட்டி
    X

    மேற்குவங்க சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி

    • மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றது.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றது.

    மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த கட்சி நிர்வாகிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

    இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் அகமது மிர், வரும் தேர்தலில் மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    கடந்த 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் உடன் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×