என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜார்க்கண்டில் துணிகரம் - ராம்கரில் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை
- காங்கிரஸ் தலைவர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
- இச்சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கரில் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பிட்கா பவாரி என்பவர் பார்ககோன் எம்எல்ஏ அம்பா பிரசாத்தின் உதவியாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சவுந்தா பஸ்தியில் உள்ள பெட்ரோல் பங்கில் பவாரி இருந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவர்மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பவாரி உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எம்எல்ஏ அம்பா பிரசாத், முன்னாள் அமைச்சர் யோகேந்திர ஷா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்