search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சம்பளம் வழங்காததால் திருப்பதியில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
    X

    சம்பளம் வழங்காததால் திருப்பதியில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

    • 1900 ஒப்பந்த பணியாளர்கள் துப்புரவு வேலை செய்து வருகின்றனர்.
    • மாதந்தோறும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என கூறி ஆஸ்தான மண்டபம் அருகே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    திருப்பதி கோவில் வளாகங்கள், பக்தர்கள் தங்கும் அறைகள், கழிப்பறைகள், வைகுந்தம் சமையலறை உள்ளிட்டவைகளை பராமரிக்கபட்டு வருகின்றன.

    இதற்காக 1900 ஒப்பந்த பணியாளர்கள் துப்புரவு வேலை செய்து வருகின்றனர்.

    சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் இ.எஸ். ஐ, பி.எப் பிடித்தம் போக மாதந்தோறும் ரூ.9,600 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் அந்த நிறுவனத்தின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்கள் 2 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். மாதந்தோறும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என கூறி ஆஸ்தான மண்டபம் அருகே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அலுவலர் தேவி, வி.ஜி.ஓ நந்தகிஷோர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஏற்கனவே 2 மாத சம்பளம் வழங்காமல் உள்ள சுலப் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×