என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் அரசு பள்ளிகளின் வகுப்பு நேரம் அதிகரிப்பு
    X

    கேரளாவில் அரசு பள்ளிகளின் வகுப்பு நேரம் அதிகரிப்பு

    • பள்ளிகளின் புதிய வகுப்பு நேரம் காலை 9.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கனமழை காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியை திங்கட்கிழமையில் இருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    கேரள மாநிலத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளின் வகுப்பு நேரம் அரை மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது. கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தலைமையில் நடைபெற்ற மாநில கல்வி தர மேம்பாட்டு மேற்பார்வை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளின் வகுப்பு நேரம் காலை 15 நிமிடமும், மாலை 15 நிமிடமும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பள்ளிகளின் புதிய வகுப்பு நேரம் காலை 9.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கனமழை காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியை திங்கட்கிழமையில் இருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருப்பினும் தற்போதைய நிலையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், இன்றும் நாளையும் வானிலை முன்னறிவிப்பை மதிப்பிட்ட பிறகு, கடுமையான சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே மாற்றங்கள் பற்றி பரிசீலிக்கப்படும் என்று கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×