search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2030-க்குள் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 300 ஆக உயரும்: ஜோதிராதித்யா சிந்தியா
    X

    2030-க்குள் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 300 ஆக உயரும்: ஜோதிராதித்யா சிந்தியா

    • கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
    • உ.பி.யில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 19 ஆக உயரும்.

    மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரியாக ஜோதி ராதித்யா சிந்தியா கூறியதாவது:-

    உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னதாக 6 விமான நிலையங்கள் இருந்தது. தற்போது 9 விமான நிலையங்கள் உள்ளன. நாளை 10-வது விமான நிலையம் தொடங்கப்பட இருக்கிறது.

    அடுத்த ஆண்டு மேலும் 9 விமான நிலையங்கள் அமைக்கப்படும். அதன்மூலம் 19 விமான நிலையங்களாக உயரும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அஜாம்கார், அலிகார், மொராதாபாத், ஷ்ரவஸ்தி, சத்ரகூட் ஆகிய இடங்களில் தலா என்று என ஐந்து விமான நிலையங்கள் திறக்கப்படும்.

    கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 2030-க்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கை 200-ஐத் தொடும்.

    இவ்வாறு ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையல், நாளை சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட இருக்கிறது. பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்த வைக்க இருக்கிறார். இந்த விமான நிலையத்திற்கு வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தி தாம் எனப் பெயரிடப்பட இருக்கிறது.

    Next Story
    ×