search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடவுள் பெயரில் வாக்கு கேட்டதாக பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
    X

    கடவுள் பெயரில் வாக்கு கேட்டதாக பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    • உபி.யில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாக புகார்
    • மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் பிரதமர் மோடி பேசியதாக புகார்

    பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாகவும், அவரின் பேச்சு மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் பேசினார்.

    ஆகவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளுக்கு மோடி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரசாரத்திற்கு அரசுக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் எனவும் அந்த மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×