search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கிடந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்.. குஜராத்தில் பரபரப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கிடந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்.. குஜராத்தில் பரபரப்பு

    • பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
    • டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு மிரட்டல் வந்துள்ளது.

    அண்மைக் காலங்களாக விமானங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகி உள்ளது. சில நாட்கள் முன் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் விமானத்துக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது.

    இந்நிலையில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்விதமாக கடிதம் ஒன்று விமான நிலைய வளாகத்தில் கிடந்துள்ளது.

    பெயர் எழுதப்படாத அந்த கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் சில தனியார் பள்ளிகளுக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×