என் மலர்
இந்தியா

பாஜக-வின் புதிய தேசிய தலைவர் யார்?- 20-ந்தேதி அறிவிப்பு வெளியாகிறது
- ஜனவரி 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும்.
- தேவைப்பட்டால் 20-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு.
பாஜக-வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். இவர் இரண்டு முறை தேசிய தலைவராக பதவி வகித்துவிட்டார். அவருடைய பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதியுடன் முடிவடைந்தது. மேலும், தேசிய தலைவர் பதவியுடன், மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இதனால் பாஜக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் பாஜக கட்சி காலதாமதம் செய்து வந்தது. பல மாதங்களாக தேர்வு செய்யப்படாமல் இருப்பதால், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக விமர்சனம் செய்தது. இந்த நிலையில் வருகிற 20-ந்தேதி புதிய தேசிய தலைவர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என பாஜக கட்சி தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலை நடத்துவதற்காக கே. லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
அதில் "ஜனவரி 19-ந்தேதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுவை மாலை 5 மணி முதல் 6 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
வேட்புமனு மீதான பரிசீலனை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். தேவைப்பட்டால் ஜனவரி 20-ந்தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினம் புதிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நிதின் நபின் பாஜக கட்சியின் தேசிய செயல் தலைவராக உள்ளார். இவர் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இவருக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜே.பி. நட்டா 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமித் ஷாவுக்குப் பிறகு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜே.பி. நட்டா தேசிய தலைவரானார்.






