search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது
    X

    தேசிய தலைவர் ஜே.பி. நட்டா

    பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது

    • கடந்த ஆண்டு நவம்பர் 22-ம் தேதி தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • 5 மாநில தேர்தலுக்கு முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்த முடிவுகளை செயல்படுத்தி பா.ஜ.க வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுத்த மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்குகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநில முதல் மந்திரிகள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என பலர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2024 பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    Next Story
    ×