என் மலர்
இந்தியா

தெலுங்கானா சட்டசபை தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
- தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடக்கிறது.
- பா.ஜ.க. முதல் கட்டமாக 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவ், இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஆளும் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.
தெலுங்கானாவில் இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என தேர்தல் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பாஜகவும் கணிசமான தொகுதிகளை வெல்லும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதமே எஞ்சியிருப்பதால் அங்கு தேர்தல் களம் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. போத் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி சோயம் பாபு ராவும், அரவிந்த் தர்மபுரி கொரூட்லா தொகுதியிலும், சஞ்சய் குமார் பண்டி கரிம் நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.






