search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.450க்கு கியாஸ் சிலிண்டர், பெண்களுக்கு இலவச கல்வி - ம.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி
    X

    ரூ.450க்கு கியாஸ் சிலிண்டர், பெண்களுக்கு இலவச கல்வி - ம.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

    • ஏழைகளுக்கு 450 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
    • ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு இலவச கல்வி வழங்கப்படும்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் வி.டி.சர்மா, முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.450க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

    ஏழைப் பெண்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.

    கோதுமை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,700, நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,100 வரை ஆதார விலை வழங்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

    ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை இலவச கல்வி.

    அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதிசெய்ய பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் போன்று முதல் மந்திரி ஜன் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

    அரசுப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்துடன், காலை உணவு வழங்கப்படும். 6 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும்.

    பழங்குடியின சமுதாயம் அதிகாரம் பெற பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×