search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசமைப்பு சட்டத்தை திருத்துவோம் என கூறிய பாஜக எம்.பிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு
    X

    அரசமைப்பு சட்டத்தை திருத்துவோம் என கூறிய பாஜக எம்.பிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு

    • இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார்
    • இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும்

    6 முறை எம்.பி.யாக இருந்த கர்நாடகாவைச் சேர்ந்த அனந்த்குமார் ஹெக்டேவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க பாஜக மறுத்துள்ளது.

    மார்ச் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சித்தாபுராவில் உள்ள ஹலகேரி என்ற கிராமத்தில், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பியுமான அனந்த் குமார் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது, "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார். தற்போது மக்களவையில் 2/3 பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.

    எனவே, அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும். அதற்கு, இந்த பெரும்பான்மை போதாது." எனப் பேசினார்.

    அரசியல் சாசனம் பற்றிய அவரது கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×