என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தலுக்காக சலுகைகள் அறிவிப்பது இருக்கட்டும்: பீகாருக்கு 20 வருடம் என்.டி.ஏ. செய்தது என்ன?- பிரியங்கா காந்தி
    X

    தேர்தலுக்காக சலுகைகள் அறிவிப்பது இருக்கட்டும்: பீகாருக்கு 20 வருடம் என்.டி.ஏ. செய்தது என்ன?- பிரியங்கா காந்தி

    • பிரதமர் தேவையற்ற பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்.
    • ஊழல், பீகாரில் NDA அரசின் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி சஹர்சாவில் நடைபெற தேர்தல் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    பீகார் தேர்தலுக்காக சலுகைகள் அறிவிப்பதற்கு முன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 20 ஆண்டுகளில் பீகார் மாநிலத்திற்கு NDA என்ன செய்தது என்பது குறித்து முதலில் பதில் அளிக்க வேண்டும்.

    வேலையின்மை பெருகி வருவதாலும், வேலைவாய்ப்பு உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பாஜகவின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்கப்படுவதாலும் பீகாரின் இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் தேவையற்ற பிரச்சினைகள் குறித்து பேசுகிறார். ஊழல், பீகாரில் NDA அரசின் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    பீகாரை அவமதித்ததாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் பிரதமர் குற்றம் சாட்டுகிறார். அவர் புதிய அமைச்சகத்தை (அவமதிப்பு அமைச்சகம்) உருவாக்க வேண்டும்.

    பீகார் அரசை நடத்துவது பிரதமர், மத்திய தலைவர்கள்தான், நிதீஷ் குமார் அல்ல.

    அரசு அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை பீகாரில் உள்ள NDA அச்சுறுத்துகிறது.

    இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

    Next Story
    ×