என் மலர்
இந்தியா

பியூட்டி பார்லர் To பெண் தாதா.. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த 'மேடம் சேகர்' கைது
- வடகிழக்கு டெல்லியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.
- ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய சலீம் பிஸ்டல் என்பவரிடம் துப்பாக்கிகள் வாங்கியுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த சர்வதேச குற்ற கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பெண் தாதா கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நேஹா என்ற குஸ்னுமா அன்சாரி, 'மேடம் சேகர்' என்று அழைக்கப்படுகிறார்.
வடகிழக்கு டெல்லியில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வந்த நேஹா, வெளிப்பார்வைக்கு சாதாரண பெண்ணாக வாழ்ந்து மறைமுகமாக தாதாவாக செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் போதைப்பொருள் விநியோக நெட்வொர்க்கை நிர்வகித்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேஹாவுடன் அவரது கூட்டாளியான மஃபூஸ் என்கிற பாபி கபுதர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாபி கபுதர், பாகிஸ்தானின் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 'சலீம் பிஸ்டல்' என்று அழைக்கப்படுபவரிடம் என்பவரிடமிருந்து நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்கி வந்துள்ளார்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நடத்திய பல முக்கியக் குற்றங்களுக்குப் பாபி கபுதர் வழங்கிய ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டதாகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.
பஞ்சாபி பாடகர் சிந்து மூஸேவாலா கொலை, திஷா பதானி வீடு அருகே துப்பாக்கிச் சூடு, இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
2024 இல் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொலையும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் இந்த சர்வதேச நெட்வொர்க் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாரன்ஸ் பிஷ்னோய்:
31 வயதான லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தட்டரன்வாலி கிராமத்தில் வசதி படைத்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார், இவரின் பிஸ்னாய் சமுதாயம் பஞ்சாப் , அரியானா, மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.
சண்டிகரில் கல்லூரி காலத்திலேயே மாணவர் அரசியலை மறைப்பாக வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடத்தொடங்கியுள்ளார் லாரன்ஸ்.
2010 ஆம் ஆண்டு அவர் மீது முதல் வழக்கு பதிவாகியுள்ளது. அதுவும் ஓரூ கொலை முயற்சி வழக்கு. இவ்வாறு குற்றச்செயலுக்காக ஒரு குவளை சிறிய அளவில் தொடங்கி காலப்போக்கில் அதை விரிவுபடுத்தியுள்ளார்.
ஆள் கடத்தல், காண்டிராக்ட் கொலைகள் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் சிறைகளில் இருந்தும்கூட நெட்வொர்க்கிங் மூலம் செயல்பட்டவரே இருக்கின்றனர் கடந்த 2015 இல் லாரன்ஸ் பிஷ்னோய் கைதுசெய்யப்பட்டு தற்போது குஜராத்தின் அகமதாபாத் சபர்மதி சிறையில் உள்ளார்.






