என் மலர்
இந்தியா

சாலை விபத்து
பீகாரில் சோகம் - சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலி
- பீகாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியாகினர்.
- விசாரணையில் வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என தெரிந்தது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தில் இன்று சாலையோரம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் பலியாகினர்.
விசாரணையில் வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பலியானோர் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






