search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாமை தொடர்ந்து அரியானாவிலும் அதிரடி நடவடிக்கை- உடல் எடையை குறைக்காத போலீசாருக்கு விருப்ப ஓய்வு
    X

    அசாமை தொடர்ந்து அரியானாவிலும் அதிரடி நடவடிக்கை- உடல் எடையை குறைக்காத போலீசாருக்கு விருப்ப ஓய்வு

    • மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அசாம் அரசு அறிவித்தது.
    • குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது.

    அசாம் மாநிலத்தில் போலீசார் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    அடுத்து வரும் 3 மாதங்களுக்குள் உடல் எடையை குறைக்க முடியாத போலீசாருக்கு விருப்ப ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அசாம் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், அசாம் மாநிலத்தை தொடர்ந்து அரியானாவிலும் உடல் எடை அதிகம் கொண்ட போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    உடல் எடை அதிகம் கொண்ட போலீசார் களப் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.

    குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமானதாக குறிப்பிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் அனில் விஜ், இதன்மூலம் குற்றமல்லதா மாநிலமாக மாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

    உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வராத காவல்துறையினர் 3 மாதங்களில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அசாம் அரசு அறிவித்திருந்த நிலையில் அரியானா அரசும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×