என் மலர்tooltip icon

    இந்தியா

    புனேயில் பரவும் அரியவகை நோயால் 73 பேர் பாதிப்பு
    X

    புனேயில் பரவும் அரியவகை நோயால் 73 பேர் பாதிப்பு

    • 14 பேருக்கு செயற்கை சுவாசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும்.

    இந்த அரிய வகை நோயால் 73 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேருக்கு செயற்கை சுவாசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும்.

    இந்த நோய் பாதிப்பு 4 நாட்களில் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக பரிசோதனையை தொடங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட 73 நோயாளிகளில் 44 பேர் புனே கிராமப்புறத்திலும், 11 பேர் புனே நகராட்சிப் பகுதியிலும், 15 பேர் சின்ச்வாட் நகராட்சிப் பகுதியிலும் உள்ளனர்.

    இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் டாக்டரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×