என் மலர்
இந்தியா

முருகனுக்கு அரோகரா... தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
- வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
- தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழ் நாடு முழுக்க இன்று தைப்பூச திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. காலை முதலே மாநிலும் முழுவதிலும் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தைப்பூச திருநாளை ஒட்டி அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி தைப்பூச திருநாளுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்," என தெரிவித்துள்ளார்.
Next Story






