என் மலர்
இந்தியா

ஐதராபாத்தில் இன்று 2000 கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்களுடன் அமித்ஷா சந்திப்பு
- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் கூட இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
- அமித்ஷா 2020 -ம் ஆண்டில் முக்கிய விளையாட்டு, திரைப்படம் மற்றும் ஊடகப் பிரமுகர்களைச் சந்தித்ததன் மூலம் மாநிலத்தில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்.
திருப்பதி:
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஐதராபாத் வருகிறார். இன்று மாலை 2,000-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் கூட இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற துணை வேந்தர்கள், முன்னாள் ஐஏஎஸ் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா 2020 -ம் ஆண்டில் முக்கிய விளையாட்டு, திரைப்படம் மற்றும் ஊடகப் பிரமுகர்களைச் சந்தித்ததன் மூலம் மாநிலத்தில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்.
இதனிடையே, மத்திய உணவுத் துறை மந்திரி பியூஷ் கோயல் அக்டோபர் 14-ஆம் தேதி செரிலிங்கம்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியிலும், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அக்டோபர் 16-ந்தேதி ஹுசூராபாத் மற்றும் மகேஸ்வரம் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜி பிரேமேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.






