search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமர்நாத் புனித யாத்திரை- பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு
    X

    அமர்நாத் புனித யாத்திரை- பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு

    • அமர்நாத் யாத்திரையில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பு வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் கோவிலில் ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஜூலை 1-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரையில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் சுமார் 3,800 மீட்டர் உயர பனிமலையில் பக்தர்கள் ஏறியபோது 2 பேர் மயங்கி விழுந்து இறந்தனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பு வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனால் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்றபோது பலியான பக்தர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×