search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு- காற்று மாசு அதிகரிப்பு
    X

    டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு- காற்று மாசு அதிகரிப்பு

    • டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
    • டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். பல்வேறு பகுதிகளில் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு கடுமையான சூழல் நிலவி வரும் நிலையில் பட்டாசு வெடிக்க டெல்லி அரசு 3வது ஆண்டாக தடை செய்தது. இந்த உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது.

    பட்டாசு வெடிக்க தடை உள்ள நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

    தெற்கு டெல்லியின் சர்தர்பூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் மக்கள் அதிகளவில் பட்டாசு வெடித்தனர். அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களும் சிறு, சிறு பட்டாசுகளை குழந்தை களுக்கு விற்பனை செய்தனர். தெற்கு டெல்லி யின் கிழக்கு கைலாஷ் பகுதியி லும் சிலர் பட்டாசு வெடித்தனர். ஷாபூர் காட் மற்றும் ஹவுஸ் காஸ் பகுதியில் மக்கள் அதிகளவில் பட்டாசு வெடித்தனர். அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் ஏராளமானோர் கூடி பட்டாசு வெடித்தனர். இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடித்தது மிகவும் குறைவு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    பட்டாசு வெடிக்க தடை இருந்த போதிலும் மக்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    Next Story
    ×