என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பல தசாப்தங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சமின்றி தேர்தல்: பிரதமர் மோடி
- வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத் யாத்திரைகளின் பாதுகாப்பு குறித்து கவலை இருந்தது. ஆனால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
- ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சி கண்டுவருவதுடன், அரசின் மீது மக்களின் நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது.
பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மக்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்ததை தங்களது வாக்குறுதியை (370 சட்டப்பிரிவு நீக்கம்) நிறைவேற்றியதன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நான் கடந்த 50 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வந்துள்ளேன்.
1992-ம் ஆண்டு ஏக்தா யாத்திரையின்போது லால் சவுக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்ததை திரும்பிப் பார்க்கிறேன். அப்போது நாங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றோம். 2014-ல் வைஷ்ணோ தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, பயங்கரவாதம் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து நிவாரணம் பெற்றுக் கொடுப்போம் என வாக்குறுதி வழங்கினோம். மக்களின் ஆசீர்வாதத்தால், வாக்குறுதியை நிறைவெற்றியுள்ளோம்.
பல தசாப்தங்களுக்கு பிறகு பயங்கரவாதம், பிரிவினைவாதம், கல் எறிதல், போராட்டம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற அச்சம் இல்லாமல் தேர்தல் நடைபெற இருக்கிறது. வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத் யாத்திரைகளின் பாதுகாப்பு குறித்து கவலை இருந்தது, ஆனால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கண்டுவருவதுடன், அரசின் மீது மக்களின் நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது.
தயவுசெய்து என்னை நம்புங்கள், கடந்த 60 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகளை விடுவிப்பேன். எனது வாக்குறுதியை நிறைவேற்றிதன் மூலமாக கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் முழுவதுமாக மாறியுள்ளது.
இந்தியா எதிர்கொண்டுள்ள சவால்களை சந்திக்க வலுவாக மத்திய அரசு அமைய பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
ஜம்மு-காஷ்மீர் உதம்பூரில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் போட்டியிடுகிறார். ஜம்முவில் ஜுகல் கிஷோர் போட்டியிடுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்