என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பேஸ்புக்கில் போலி கணக்குகளை தொடங்கி கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பெயரில் பண மோசடி
- அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக ஹரிசேகரன் போல் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
- கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன் பெயரில் 6 போலி பேஸ்புக் வலைத்தள கணக்குகள் செயல்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநில தீயணைப்பு துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ஹரிசேகரன். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மேலும் இவர் மறைந்த தமிழக மந்திரி கக்கனின் உறவினர் ஆவார். இவரது பெயரில் பேஸ்புக் வலைதள பக்கத்தில் போலி கணக்கு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த கணக்கை கொண்டு பலரிடம் அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக ஹரிசேகரன் போல் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதை நம்பிய சிலர் அதில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சந்தேகம் அடைந்த சிலர் இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி.க்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அவர் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன் பெயரில் 6 போலி பேஸ்புக் வலைத்தள கணக்குகள் செயல்பாட்டில் இருந்ததும், அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பயன்படுத்தி பண மோசடி கும்பல் கைவரிசை காட்டியதும் தெரிந்தது.
இதையடுத்து மோசடி கும்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்