search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துரோகிகள் எங்களை விட்டு சென்றுவிட்டனர்: ஆதித்ய தாக்கரே
    X

    துரோகிகள் எங்களை விட்டு சென்றுவிட்டனர்: ஆதித்ய தாக்கரே

    • தாக்கரே குடும்பத்தின் மீது மரியாதை வைத்திருப்பதாக சிவசேனா அதிருப்தியாளர்கள் சொல்வது பொய்.
    • தற்போது அசல் சிவசேனா தொண்டர்கள் இன்னும் கட்சியில் உள்ளனர்.

    மும்பை

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்த சிவசேனா தற்போது பாராளுமன்றத்திலும் தனது பலத்தை பறிகொடுத்துள்ளது. சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் 12 பேர் மக்களவையில் தனியாக செயல்பட முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் உத்தவ் தாக்கரே மீது சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவரது மகன் ஆதித்ய தாக்கரே கூறியதாவது:-

    சிவசேனாவின் அதிருப்தியாளர்கள் வெளியேற்றம் எங்கள் மீதான வெறுப்பையும், பொறாமையையும், கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. இவர்கள் உண்மை முகம் வெளிவந்துள்ளது. தாக்கரே குடும்பத்தினர் மீது மரியாதை வைத்திருப்பதாக அவர்கள்(அதிருப்தியாளர்கள்) பொய் செல்கிறார்கள். துரோகிகள் எங்களை விட்டு சென்றுவிட்டனர். ஆனால் தற்போது அசல் சிவசேனா தொண்டர்கள் இன்னும் கட்சியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னால் வைக்கப்பட்ட மைக்கை துணை முதல்-மந்திரி பறித்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து ஆதித்ய தாக்கரே கூறுகையில், "எங்கள் துணை முதல்-மந்திரி அப்போதைய முதல்-மந்திரியான உத்தவ் தாக்கரேவிடம் இருந்து ஒருபோதும் மைக்கை பறிக்கவில்லை என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது" என்றார்.

    இந்த நிலையில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தானே, நாசிக் மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் அங்கு சில பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    Next Story
    ×