search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி ஏழுமலையான் தரிசன முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் - கோவில் தலைமை நிர்வாகி அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருப்பதி ஏழுமலையான் தரிசன முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் - கோவில் தலைமை நிர்வாகி அறிவிப்பு

    • ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோவில்கள் கட்டப்பட்ட திட்டம்.
    • நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி கூறியிருப்பதாவது:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்காக முன் பதிவு செய்யும் பக்தர்கள், இனி ஆதார் அட்டை மூலம் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும் என திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மூவாயிரம் கோயில்கள் வரை கட்டும் பணி திட்டமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆந்திர மாநில அறநிலையத்துறை, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் அரசியல் சார்பற்ற இந்து தர்ம பிரச்சார குழு ஏற்பாட்டில் இந்த கோவில் கட்டும் பணிகள் நடைபெறுவதாக ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி கூறியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×