25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த மாணவர் பலி

இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தலையில் பலத்த காயம் அடைந்த ஷ்ரேயாஸ் பரிதாபமாக இறந்தார்.
25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த மாணவர் பலி
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு பேகூர் சாலையின் விஸ்வபிரியநகரை சேர்ந்தவர் சிவானந்தா பாட்டீல். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஷ்ரேயாஸ் பாட்டீல் (வயது 19). பி.காம் மாணவர். இவர் இன்று அதிகாலை 3.45 மணியளவில், அக்ஷய் நகரை சேர்ந்த நண்பர் கே. சேத்தனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் ரிச்மண்ட் சர்க்கிள் ரெசிடென்சி சாலையை நோக்கி செல்லும் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது. இதில் இருவரும் 25 அடியரத்தில் இருந்து பாலத்தின் கீழே உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த ஷ்ரேயாஸ் பரிதாபமாக இறந்தார். சேத்தனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com