search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் சோகம் - சொகுசு படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி
    X

    கேரளாவில் சோகம் - சொகுசு படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி

    • கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.
    • 30 பேர் வரை நீரில் மூழ்கி உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்து விபத்தில் சிக்கியது. இந்தக் கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 30 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.

    தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    படகு கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×