என் மலர்
இந்தியா

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டிய 513 பேர் மீது வழக்கு
- போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதித்தனர்.
- முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்தி கண்காணித்தனர்.
பெங்களூரு:
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இந்த நிலையில் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதித்தனர். மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்தி கண்காணித்தனர்.
மேலும் மது குடித்து விட்டு யாராவது வாகனங்கள் ஓட்டுகிறார்களா என்று 28 ஆயிரத்து 127 வாகனங்களில் தீவிரமாக சோதனை நடத்தினர். இதில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது குடித்து விட்டு கார், இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த சுமார் 513 பேரை மடக்கிபிடித்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story






