என் மலர்
இந்தியா

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்: 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்
- ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படைவீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்புப் படைவீரர்கள் அப்பகுதிக்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் வீரர்கள் மற்றும் 2 அதிகாரிகளும் அடங்குவர்.
இதையடுத்து அப்பகுதியில் மறைந்துள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






