என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,338 ஆக குறைந்தது
Byமாலை மலர்31 May 2022 4:26 AM GMT (Updated: 31 May 2022 4:26 AM GMT)
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை மொத்தம் 4 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 574 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 2,828 ஆக இருந்தது. நேற்று 2,706 ஆக சரிந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 58 ஆயிரத்து 87 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,134 பேர் முழுமையாக நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 574 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று இந்த எண்ணிக்கை மேலும் 185 உயர்ந்து உள்ளது. தற்போது 17,883 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா காரணமாக மேலும் 19 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 17 மரணங்கள் அடங்கும்.
இதுதவிர நேற்று டெல்லி, ராஜஸ்தானில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,630 ஆக உயர்ந்தது.
நாடு முழுவதும் நேற்று 13,33,064 டோஸ்களும், இது வரை 193 கோடியே 45 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 2,828 ஆக இருந்தது. நேற்று 2,706 ஆக சரிந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 58 ஆயிரத்து 87 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,134 பேர் முழுமையாக நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 574 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று இந்த எண்ணிக்கை மேலும் 185 உயர்ந்து உள்ளது. தற்போது 17,883 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா காரணமாக மேலும் 19 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 17 மரணங்கள் அடங்கும்.
இதுதவிர நேற்று டெல்லி, ராஜஸ்தானில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,630 ஆக உயர்ந்தது.
நாடு முழுவதும் நேற்று 13,33,064 டோஸ்களும், இது வரை 193 கோடியே 45 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 3,63,883 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.04 கோடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்...கோமா நிலையில் இல்லை- நித்யானந்தா புதிய பதிவு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X