search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    அயோத்தி நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து லாரி மீது மோதி 7 பேர் உயிரிழப்பு

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    பஹ்ரைச்- லக்கீம்பூர் நெடுஞ்சாலையில் இன்று கர்நாடகாவில் இருந்து 16 பேரை ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து அயோதிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோதிபூர் பகுதுியில் உள்ள நனிஹா சந்தையில் நுழைந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

    பேருந்து ஓட்டுநர் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார தேடி வருகின்றனர். சம்பவத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. மணிப்பூர் கக்சிங் பகுதியில் தீவிரவாதி கைது
    Next Story
    ×