search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏகே அந்தோணி
    X
    ஏகே அந்தோணி

    மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்- முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி

    காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு இல்லாமல் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.கே. அந்தோணி.

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏ.கே. அந்தோணி ராணுவ மந்திரி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    கட்சியிலும் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் ஏ.கே. அந்தோணி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது

    காங்கிரசின் எதிர்காலம் குறித்து எனக்கு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். மீண்டும் பழைய பலத்துடன் கட்சி எழுச்சி பெறும்.

    காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு இல்லாமல் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. நேரு, காந்தி குடும்பமே காங்கிரஸ் கட்சியின் அதிகார மையமாகவும், வழிகாட்டும் சக்தியாகவும் உள்ளது. அந்த குடும்பத்தினர் இல்லாத காங்கிரசை 99 சதவீத தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    தேசிய அரசியலில் 35 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றி விட்டேன். இன்னும் இங்கேயே இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை.

    படிப்படியாக இந்த பணியில் இருந்து விலகி கேரள அரசியலில் ஈடுபட விரும்புகிறேன். இதற்கான நடவடிக்கைகளை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×