என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேரள லாட்டரியில் குடிசை வீட்டில் வசித்த தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் பரிசு
Byமாலை மலர்22 April 2022 6:06 AM GMT (Updated: 22 April 2022 6:06 AM GMT)
ஆலப்புழாவை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் அரசே நடத்தும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.
இதில் காருண்யா லாட்டரி சீட்டின் குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை அதிகாரிகள் தேடி வந்தனர்.
இதில் ஆலப்புழாவை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 51) என்ற தொழிலாளிக்கு முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்திருப்பது தெரிய வந்தது.
அரூரில் சண்முகம், ஒரு அறை மட்டுமே கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் அவருடன் மனைவி, 2 மகன்கள் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.
லாட்டரியில் முதல் பரிசாக ரூ.80 லட்சம் கிடைத்தது பற்றி தெரியவந்ததும், அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் பரிசு பணத்தை கொண்டு புதிய வீடு கட்டுவேன் என்றும் கூறினார்.
சண்முகம் பரிசு விழுந்த சீட்டுடன் சேர்த்து மேலும் 4 சீட்டுகள் எடுத்து இருந்தார். இந்த சீட்டுகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 8 ஆயிரம் கிடைத்தது.
கேரளாவில் அரசே நடத்தும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.
இதில் காருண்யா லாட்டரி சீட்டின் குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை அதிகாரிகள் தேடி வந்தனர்.
இதில் ஆலப்புழாவை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 51) என்ற தொழிலாளிக்கு முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்திருப்பது தெரிய வந்தது.
அரூரில் சண்முகம், ஒரு அறை மட்டுமே கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் அவருடன் மனைவி, 2 மகன்கள் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.
லாட்டரியில் முதல் பரிசாக ரூ.80 லட்சம் கிடைத்தது பற்றி தெரியவந்ததும், அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் பரிசு பணத்தை கொண்டு புதிய வீடு கட்டுவேன் என்றும் கூறினார்.
சண்முகம் பரிசு விழுந்த சீட்டுடன் சேர்த்து மேலும் 4 சீட்டுகள் எடுத்து இருந்தார். இந்த சீட்டுகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 8 ஆயிரம் கிடைத்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X