என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
2024 தேர்தலில் மம்தா மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவராக திகழ்வார் - சத்ருகன் சின்ஹா
Byமாலை மலர்16 April 2022 11:35 AM GMT (Updated: 16 April 2022 11:35 AM GMT)
மேற்கு வங்காளத்தின் பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார்.
கொல்கத்தா:
மேற்குவங்காள மாநிலம் அசன்சோல் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவும், பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வான அக்னிமித்ரா பவுலும் போட்டியிட்டார்.
அசன்சோல் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே சத்ருகன் சின்ஹா முன்னிலையில் இருந்து வந்தார்.
இறுதியில், சத்ருகன் சின்ஹா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற நிலையில் சத்ருகன் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த வெற்றி திரிணாமுல் காங்கிரஸ், மம்தா பானர்ஜி மற்றும் அசன்சோல் தொகுதி மக்களின் வெற்றியாகும்.
நாடு முழுவதும் புகழ்பெற்ற தலைவராக திகழ்பவர் மம்தா பானர்ஜி. வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவராகத் திகழ்வார் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...கிச்சடியில் உப்பு அதிகம்: ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X