search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் கலெக்டர்களாக பணிபுரியும் கணவன்-மனைவி தங்களது குழந்தைகளுடன் உள்ள காட்சி.
    X
    ஆந்திராவில் கலெக்டர்களாக பணிபுரியும் கணவன்-மனைவி தங்களது குழந்தைகளுடன் உள்ள காட்சி.

    ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர்களாக பணியாற்றும் கணவன்-மனைவி

    ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட என்.டி.ஆர். மாவட்டத்திற்கு டெல்லிராவ் புதிய கலெக்டராகவும், பிரசாந்தி மேற்கு கோதாவரி மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    திருப்பதி:

    ஆந்திரா மாநிலத்தில் இருந்த 13 மாவட்டங்கள் நேற்று முன்தினம் 2-ஆக பிரிக்கப்பட்டு புதியதாக 13 மாவட்டங்கள் உதயமாகி மொத்தம் 26 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது.

    புதிதாக பிரிக்கப்பட்ட 2 மாவட்டங்களுக்கு கணவன்-மனைவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் மந்தஷா அடுத்த பிடி கிராமத்தை சேர்ந்தவர் டெல்லி ராவ் (வயது 40). சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த டெல்லி ராவ் கடந்த 2006-ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார்.

    இவரது மனைவி பிரசாந்தி (36). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவரும் கடந்த 2008-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற கணவன்-மனைவி இருவரும் பல்வேறு இடங்களில் உதவி கலெக்டராக வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட என்.டி.ஆர். மாவட்டத்திற்கு டெல்லிராவ் புதிய கலெக்டராகவும், பிரசாந்தி மேற்கு கோதாவரி மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கணவன்- மனைவி இருவரும் நேற்று முன்தினம் அந்தந்த மாவட்டங்களில் கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    அவர்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


    Next Story
    ×