என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கடையில் தீப்பிடித்ததால் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர் - 4 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்14 March 2022 10:55 PM GMT (Updated: 14 March 2022 10:55 PM GMT)
தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீவிர முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்முவில் உள்ள ரெசிடென்சி சாலையில் ஒரு கடையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதன் தொடர்ச்சியாக அந்த கடையில் வைக்கப் பட்டிருந்த எல்பிஜி சிலிண்டர் வெடித்து சிதறியது.
நேற்று மாலை நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். கடையில் ஏற்பட்ட தீ, பின்னர் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியது. உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா
ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஐம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X